free hit counter
Web Hit Counter
காதலே சுவாசம் ! ! !: 2010

Sunday, April 11, 2010

என் பேரழகு பெட்டகமே

சற்றே நாம் தனித்திருந்த இளமாலை நேரம்...

உன் கூர்வேல் விழியால் எனை விழுங்கியபடி கேட்கிறாய் ஒரு கேள்வி...

நான் அழகியா ?? பேரழகியா ??

நீ அழகி என்று சொன்னால் நான் குருடன்..

பிரபஞ்சத்தின் பேரழகி என்பேயானால் நான் கவிஞன் என்றேன்

புரியாமல் விழித்துப் பின் பிடுங்கித் தின்னும் வெட்கத்துடன்

பேரழகாய் முறைத்து அழகு காட்டி
நீ அணைத்துக் கொண்டதைக் கொண்டாட

மாதம் ஒரு போதுமா என் பேரழகு பெட்டகமே? ? ?