free hit counter
Web Hit Counter
காதலே சுவாசம் ! ! !: காதல் பறவைகள்

Wednesday, September 10, 2008

காதல் பறவைகள்





ஒன்றை ஒன்று பாராவிட்டால்
உயிர் கூடு துறந்து
போகுமாம்
அன்றில் பறவையின்
உயிர் பறவை..

அன்பே...

ஒவ்வொரு முறை உன்னை பார்க்க வரும் போதெல்லாம்..
ஒரு கவிதையோடு வருவேன்..
உன் கையில் கொடுத்துவிட்டு
உன் முகத்தின் மாற்றங்களை
மௌனமாக ரசிப்பேன்..

எப்போதும் என்னை ஏமாற்றா நீ
எனக்கு மட்டும் காணக் கிடைக்கும்
உன் கன்னத்து சிவப்பை அப்போதும் 
அள்ளித் தருவாய்..

தினம் என்னை பார்க்கிறாய்..
மணிக்கணக்கில் பேசுகிறாய்..
ஆனாலும் உன் கவிதைகள்
தினம் தினம் புதிதாகவே இருக்கிறதே
எப்படி? என்று பொய் சந்தேகப் பார்வை பார்ப்பாய்..

நான் புன்னகைத்தபடியே
உன் இரு விழி நதிகளில்
என் விழி ஓடையைக் கலக்க விடுவேன்..

தினம் கொடுக்கும் ஒரே விளக்கத்தை
வெவ்வேறு உவமைகளில் நான்
சொன்னாலும் அன்றுதான்
கேட்பது போல
வெட்கத்தை மட்டும் 
பரிசாகத் தருவாய்..

இன்றும் ஒரு விளக்கம்...

வழக்கம் போலே
எனக்கு உன் வெட்கம்...

நாளைக்கு...
புது உவமை..
அதே விளக்கம்
ஆனால்
என்றும் புதிதாய்
தெரியும்
உன் 
வெட்கம்...


12 comments:

நாணல் said...

அழகா இருக்கு ... :))

//என்றும் புதிதாய்
தெரியும்
உன்
வெட்கம்...//

வாழ்க்கையோட சுவாரசியமே தினம் தினம் புதிதாய் தெரிவது தானோ.. ;)

YILAVEANIL said...

//naanal said...
அழகா இருக்கு ... :))//

நன்றி

//என்றும் புதிதாய்
தெரியும்
உன்
வெட்கம்...//

வாழ்க்கையோட சுவாரசியமே தினம் தினம் புதிதாய் தெரிவது தானோ.. ;) //


நிச்சயமாக..

நீங்கள் சொல்வது உண்மைதான்..

காதலில் காதலி சலிப்பதேயில்லை..

தினமும் பார்க்கும் முகம் தான்
மறுப்பதற்கில்லை..
தினமும் பார்த்தாலும் நிலவென்ன
சலித்தாவிட்டது..

பொன்னியின் செல்வன் இறுதி பாகத்தில்
குந்தவையிடம்
வந்தியத்தேவன் சொல்வாரே..

'நிலவில் உங்கள் முகத்தை காண்பேன்' என்று..

அது போலத்தான் இதுவும்..

நாணல் said...

//தினமும் பார்க்கும் முகம் தான்
மறுப்பதற்கில்லை..
தினமும் பார்த்தாலும் நிலவென்ன
சலித்தாவிட்டது..

பொன்னியின் செல்வன் இறுதி பாகத்தில்
குந்தவையிடம்
வந்தியத்தேவன் சொல்வாரே..

'நிலவில் உங்கள் முகத்தை காண்பேன்' என்று..

அது போலத்தான் இதுவும்..//

:) :) nijam thaan....

Unknown said...

அச்சச்சோ என்ன அண்ணா இப்படி உருகி உருகி கவிதை எழுதிருக்கீங்க??? :)) நல்லாருக்கு..!! :)))))

//ஒவ்வொரு முறை உன்னை பார்க்க வரும் போதெல்லாம்..
ஒரு கவிதையோடு வருவேன்..
உன் கையில் கொடுத்துவிட்டு
உன் முகத்தின் மாற்றங்களை
மௌனமாக ரசிப்பேன்..//

இப்படி பார்த்துகிட்டே இருந்தா வெட்கமா தான் அண்ணா இருக்கும்..!! :))

//தினம் கொடுக்கும் ஒரே விளக்கத்தை
வெவ்வேறு உவமைகளில் நான்
சொன்னாலும் அன்றுதான்
கேட்பது போல
வெட்கத்தை மட்டும்
பரிசாகத் தருவாய்..

இன்றும் ஒரு விளக்கம்...

வழக்கம் போலே
எனக்கு உன் வெட்கம்...

நாளைக்கு...
புது உவமை..
அதே விளக்கம்
ஆனால்
என்றும் புதிதாய்
தெரியும்
உன்
வெட்கம்...//

ம்ம்ம் சரிதான்..!! :))

MSK / Saravana said...

//இன்றும் ஒரு விளக்கம்...

வழக்கம் போலே
எனக்கு உன் வெட்கம்...//

கலக்கீடீங்க போங்க..
:)))

"Its my world" said...

அன்பே...

ஒவ்வொரு முறை உன்னை பார்க்க வரும் போதெல்லாம்..
ஒரு கவிதையோடு வருவேன்..
உன் கையில் கொடுத்துவிட்டு
உன் முகத்தின் மாற்றங்களை
மௌனமாக ரசிப்பேன்..

எப்போதும் என்னை ஏமாற்றாத நீ
எனக்கு மட்டும் காணக் கிடைக்கும்
உன் கன்னத்து சிவப்பை அப்போதும்
அள்ளித் தருவாய்..

தினம் என்னை பார்க்கிறாய்..
மணிக்கணக்கில் பேசுகிறாய்..
ஆனாலும் உன் கவிதைகள்
தினம் தினம் புதிதாகவே இருக்கிறதே
எப்படி? என்று பொய் சந்தேகப் பார்வை பார்ப்பாய்..

நான் புன்னகைத்தபடியே
உன் இரு விழி நதிகளில்
என் விழி ஓடையைக் கலக்க விடுவேன்..

தினம் கொடுக்கும் ஒரே விளக்கத்தை
வெவ்வேறு உவமைகளில் நான்
சொன்னாலும் அன்றுதான்
கேட்பது போல
வெட்கத்தை மட்டும்
பரிசாகத் தருவாய்..

இன்றும் ஒரு விளக்கம்...

வழக்கம் போலே
எனக்கு உன் வெட்கம்...

நாளைக்கு...
புது உவமை..
அதே விளக்கம்
ஆனால்
என்றும் புதிதாய்
தெரியும்
உன்
வெட்கம்...

எப்படி எவோலோவு ரசிச்சு எழுதுறீங்க???......அனைத்து வரிகளும் நன்று :) ......எப்போவும் போல இந்த கவிதையும் மிகவும் அருமை!!!!!!!!

நாணல் said...

என்னோட blog பாருங்க...

"Its my world" said...

HI,
welcome back :-))))))....happy to see u again
waitin 4 ur posts....kp posted soon

cheers
bhavani eshu

நட்புடன் ஜமால் said...

//எப்போதும் என்னை ஏமாற்றாத நீ
எனக்கு மட்டும் காணக் கிடைக்கும்
உன் கன்னத்து சிவப்பை அப்போதும்
அள்ளித் தருவாய்..//

அண்ணா எப்படிண்ணா இது.

அருமை போங்க.

Karthik Krishna said...

அழகாக சொன்னீர்கள்....

அருமை....
நீங்கள் சொல்வது உண்மை...
நான் ஏற்றுக்கொள்கிறேன்...

இனிய வாழ்த்துக்கள்...

தொடரட்டும் உங்கள் வரிகள்....

அன்புடன்
- கார்த்திக் -

அ.மு.செய்யது said...

//எப்போதும் என்னை ஏமாற்றாத நீ
எனக்கு மட்டும் காணக் கிடைக்கும்
உன் கன்னத்து சிவப்பை அப்போதும்
அள்ளித் தருவாய்..
//

காதல் கணங்கள் எப்போதும் அழகு தான்.

Cute and sweet words...excellent !!!

தேவன் மாயம் said...

நாளைக்கு...
புது உவமை..
அதே விளக்கம்
ஆனால்
என்றும் புதிதாய்
தெரியும்
உன்
வெட்கம்...///

புதிதாய்
தெரியும்
உன்
வெட்கம்!!

நல்ல அழகான கவிதை
தேவா.